[ No Description ]



 



FREE

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிற தவழும் பருவம் நாவல் தேவியின் கண்மணி இதழில் வெளியாகி எனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது. மர்மக் கதை, காதல், அரசியல், மாந்திரீகம் என பலதரப்பட்ட கதைகள் எழுதினாலும் கூட குடும்ப நாவல்களில் கிடைக்கும் திருப்தியே தனி! அதுவும் தேவியின் கண்மணி இதழுக்கென்று தனி பாணியும், கொள்கையும் வைத்திருக்கிறார்கள் விரசம் கூடாது; கதையில் நல்லதொரு மேஸேஜ் இருக்க வேண்டும். அதுவும் பெண் இனத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் இருப்பதோடு விறுவிறுப்பும் வேண்டும். இந்த பாணியில் எழுதுபவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவது அவர்களின் தனிச்சிறப்பு. இந்த நாவல் கண்மணியின் ஆசிரியர் குழுவுடன் பலமுறை கலந்து பேசி விவாதித்து உருவாக்கியது. ஆகையால் இதன் வெற்றியில் அவர்களுக்கும் பங்குண்டு. அவர்களுக்கும் புத்தகமாய் வெளியிடும் வள்ளி புத்தக நிலையத்தாருக்கும் எனது நன்றி. அன்புடன் என்.சி.மோகன்தாஸ்
view book